Saturday, August 25, 2007

சினிமாக்காரன் பத்திரிக்கைக்காரனைவிட மேலானவன்

சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவுகூ.ட இல்லாமல்
அதன் தொழில் நுட்பம் உட்பட அனைத்தையும்
பேசும் பத்திரிக்கைக்காரர்களைவிட சினிமாக்காரர்கள் மேலானவர்களே

சினிமா என்றால் என்ன...
அது பொழுதுபோக்கா?
வரலாறு சொல்லமா?
வாழ்க்கையை அப்படியே காட்டுமா
என்று நீங்கள் வகைபிரிக்காமல்
பேசுவதற்கு முன் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்குறீர்கள்

மாதக் கணக்கிலும் வாரக்கணக்கிலும்
காத்திருந்து பத்திரிக்கையில்
மக்கள் படிக்க வேண்டிய தலைப்பு செய்தி
நமீதாவுக்கு அகலமான மனசு......
சிம்புவின் லீலைகள் இது தானா
என்றாவது ஒருவாரமாவது சினிமாவினர் இல்லாத
அட்டைப்படம் வருகிறதா (இந்நாளில்)
இதில் விற்பனைக்காக அவர்கள் தவறு செய்கிறார்கள்
என்று நீங்கள் சினிமாவினை குற்றம் சாட்டக்கூடாது

பத்திரிக்கையில் இருந்து வந்த கனவான்களலெல்லாம்
எடுத்த படங்களை தமிழகம் அறியும்
உங்களுக்கான வேலைகளை உருப்படியாக செய்த
பாடில்லை இங்கே நீங்கள் செய்திருக்கும் மாற்றம்
என்ன தெரியுமா இந்த நடிகர் எப்போது அரசியலுக்கு?
அரசியலுக்கு வர நினைக்கும் ஒரிரு படித்த இளைஞர்களுக்கும்
அருவருப்பை ஏற்படுத்துவது அவர்கள் கதவை சாத்துவது

இந்தக் கட்டுரையின் நோக்கம் நீங்கள்
சினிமாவை சரியாக விமர்சியுங்கள் என்பதோ
வாத்தியார் போல உங்களை நினைத்துக்
கொண்டு மார்க் போட்டு மக்கு வாத்தியார்களாக
ஆகிறீர்கள் என்று சொல்வதோ...
பத்திரிக்கையின் பேரைக்கேட்டாலே
காத தூரம் ஒடும் மக்களிடம் நீங்கள்
ஏற்படுத்தி வைத்திருக்கும் மீப்பெரிய
மாற்றத்தை பற்றியோ இல்லை

தமிழ் சினிமா சத்தியமாக உலகத்தரத்திற்கு
வளரவில்லை என்பது கண்கூடு
ஆனால் அதனை வைத்துக் காசு பார்க்கும்
நீங்கள் என்றாவது ஒருமுறையாவது அதன்
வளர்ச்சிக்காக ஒருகட்டுரையேனும் வெளியிடுகிறீர்களா?
இந்நாட்களில் இதில் சினிமாப் பத்திரிக்கைகளையு சேர்த்தே

வரும் ஒன்றிரண்டு படங்களையும்
எட்டிக் கூட பார்ப்பதில்லை
உலகத்தரத்திற்கு அங்கீகாரம் பெரும்
ஒன்றிரண்டயும் பார்ப்பதில்லை

நமக்கென்ன மக்கள் எப்படிப் போனால்
நமக்கு காசு பார்க்க வேண்டும்
நமக்குத் தெரிந்தவரை வளர்த்துவிட வேண்டும்
சினிமா வளர்வதால் யாருக்கு என்ன
லாபம்.....
ட்ரூஃபோ என்னும் பத்திரிக்கைக்காரனின்
காலத்தில் அழியா அந்தக் கருப்பு
வெள்ளைப் படங்களையும்
அந்த மனிதன் ஏற்படுத்திய புதியஅலை(நியு வேவ்)
மட்டும் தான் சாட்சியாக இருக்கிறது

சினிமாக்காரர்களும் சினிமாவும்
உங்கள் நண்பர்களாகவும்
நட்பு வளையமாகவும் மாற்ற
கொஞ்சமாவது ஒரு ரசிகராயேனும்
உதவுங்களேன்
உங்களுக்கு கமலகாசனைப் பிடிக்காமலா
சிவாசியைப் பிடிக்காமலா
ரஜினியை எம்ஜிஆரைப் பிடிக்காமலா
குழந்தைப் பருவத்தை கழித்தீர்கள்
சினிமா வளரட்டும்....
நல்லபடியாக உங்கள் உதவியோடும்......

Friday, August 24, 2007

கோடிக் காதலர்ளுக்காக தேய்ந்தேன்..... நிலா

மரணத்தை வைத்து பாடாய் படுத்தும்
மதங்களாகட்டும் மனங்களாகட்டும்
விட்டுப் போகும் வெறுமையாகட்டும்
எல்லாமும் போய்விடும் நாள் உண்டு

மரணம் எல்லோருக்கும் கண்டிப்பாக வாய்க்கப் போகிற ஒன்று
அதன் மீதான விசாரிப்பு ஏதும் யாருக்கும் ஏற்படாமலில்லை
அந்த நடு இருளில் மொட்டை மாடியில்
நிலவின் ஒளி கண்களோடு பேசிக்கொண்டிருந்த வேளை

எத்தனையாயிரமாய் பேர்கள் உன்னுடன்
காமம்பார்வை வீசியிருப்பார்கள்
எக்கோடியோ மக்கள் உன்னை
ரசித்துச் சிரித்திருப்பார்கள் அவர்கள் எங்கே

அந்தக் கனவுகள் சுமந்த சதைப் பிண்டங்கள்
எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்து போன
மாயையர்கள் எங்கிருக்கிறார்கள் இப்போது
நான் கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டு ஒடிவிட்டது நிலா

நான் இப்போது அதன் காதலனாம்
அதுதான் வெட்கப்பட்டு ஒடுகிறாள் நிலவம்மணி
நானும் வெறும் சதைப்பிண்டம்
நாளைக்கே காணாமல் போவேன்

நான் எத்தனையோ முறை விதவையானேன்.
ஒருநாள் உனக்காக வெறுமையாகுவேன்
உனக்காக தேயும் நாளும் வரும் என்றாள்
மாதா மாதம் அவள் தேய்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

யார் யாருக்காகவோ......

Tuesday, August 21, 2007

பள்ளிக்கூடம் விமர்சனம்

அறந்தாங்கியில்
நான்கு முறை திரையரங்கில்
அழகி படம் பார்த்தேன்..

திருட்டு விசிடியில்
நான்கு முறை
திருப்பி பார்த்தேன்...

சொல்ல மறந்த கதை
நல்ல படம் இது என்று
வாதாடி வெற்றி கொண்டிருக்கிறேன்..

பட்டுக்கோட்டை ராசாமணியில்
தென்றல் பார்த்தேன்
நாவலை திரையில் படித்த பிரமிப்பு...

சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி
இதை இவர் செய்ய வேண்டிய தேவை என்ன
என்று மனதிற்குள் சுட்டது.....

இப்போது பள்ளிக்கூடம் படம் பார்த்தேன்
இன்று புரிகிறது ஏன்
இவர் நடிக்க வேண்டும்....

தலைநகர் சென்னையில்
இந்த படத்தை பார்க்கிறேன்.
எவ்வளவு மாற்றம் படத்தில்... தான்...

ரோடு ஃகோம் படம் இந்த படம் வந்ததும் காணாமல்
போகப்போகிறது என்று நம்பிவிட்டு போனேன்.
என்ன ஆச்சு தங்கர் ஐயா.....

சினேகா சீமான் மட்டும் நடிக்கிறார்கள்
மற்றவர்கள் என்ன செய்யகிறார்கள்
தங்கர் அவர்களையும் சேர்த்து.....தான்.....

கதைபற்றி குத்தம் சொல்ல யாருக்கும் உரிமைகிடையாது
என்றாலும் இந்த கதையைக் கண்டிப்பாக
குற்றமே சொல்ல முடியாது.

திரைக்கதையில் ஆரம்பிக்கிறது தொய்வு
ஃபுல் ஃபோகசைப் பற்றிப் பேசும்
அவரது கேமராவின் கண்கள் வரை அத்தனையிலும் ஓளியில்லை..

ஒவியத்தை வரையத் தெரிந்திருந்தும்
ஒருசாரருக்கு என்று நினைத்து ஒரு
காவியத்தை கலைத்தது நியாமா அவருக்கு..

இதை நீங்கள் எந்த திரைதிருவிழாவிற்கும்
அனுப்பி வைக்க முடியாது
அவ்வளவு மோசம் செய்யதது ஏன்....

கலாச்சாரத்தை பற்றி பேசும் தலைவா....
தொழில்நுட்பம் இல்லாது போனால்
நம் கலாச்சாரம் கடல் கடக்காது...

ஏன் நீங்கள் இந்த படத்தை முறையாக
மீண்டும் நல்ல தரத்தோடு தகுந்த நடிகர்களைக்
கொண்டு உருவாக்கிடக் கூடாது.....

நான் நன்றாக கற்றுக் கொண்டேன் ஒரு நல்ல படத்திற்கான தரத்தை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமென்று.......